முதுமைக் கண்ணீரின் வலி



தள்ளாடும் வயதினிலே
தடி ஊன்றி நடை நடந்து
தேகங்கள் தளர்ந்தாலும்- மனதில்
தெம்பு மட்டும் குறையாமல்

வேகாத வெயிலினிலே
வெளியூர்க்கு பஸ் ஏறி
நோகாமல் நோகடிக்கும்
நோய்களுடன் போராட

மணிக்கணக்கில் காத்திருந்து
மருத்துவரைப் பார்த்த பின்பு
வழக்கம் போல் மாத்திரையை
வாரி வாரி அவர் வழங்க

வாங்கி அதைக் கையில் வைத்து
வந்த வழி திரும்பிடவே
வழியில் ஒரு வயோதிடன்
என் பிம்பம் போல் எதிர் வரவே

அவனைப் பார்த்ததுமே என் கண்கள்
கண்ணீரைக் கசிந்ததுவே...

-------------------------