
மனதில் நிறைய ஆசைகளோடு
கையில் காய்த்த காப்புகளோடு
சீக்கிறம் ஆறா காயங்களோடு
மாட்டை ஓட்டும் சாட்டைகளோடு
மூட்டை தூக்கும் ஊக்குகளோடு
சீருடையான வேட்டி துண்டோடு
திடமாக கட்டிய உருமாலையோடு
திட்டியே தீர்க்கும் அதிகாரிகளோடு
ஒட்டியே உடனிருக்கும் தொழிலாளிகள் நட்போடு
அட்டி அடுக்கும் வண்டிகளோடு
போராடியே பெறும் மாமூல்களோடு
இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றோடு
ஓடி ஓடி ஓடாய் உடைந்து சேர்த்த காசு இருநூறை வைத்து
குடும்பம் நடத்துற மனைவியை நினைத்தும்
கொடுத்ததை தின்கிற புள்ளையை நினைத்தும்
சிரித்து மகிழ்கிற பெற்றோரை நினைத்தும்
ஆறுதல் அடையுது இந்த ஆசாமி மனசு
காலைல மீண்டும் கந்து வட்டிக்காரன் நினைவு வந்ததும்
உடனே ஊக்கை தூக்குற ‘நானு லோடு மேனு’...
.

