Showing posts with label வறுமை. Show all posts
Showing posts with label வறுமை. Show all posts

நானு லோடு மேனு




கண்ணில் பல கனவுகளோடு
மனதில் நிறைய ஆசைகளோடு
கையில் காய்த்த காப்புகளோடு
சீக்கிறம் ஆறா காயங்களோடு

மாட்டை ஓட்டும் சாட்டைகளோடு
மூட்டை தூக்கும் ஊக்குகளோடு
சீருடையான வேட்டி துண்டோடு
திடமாக கட்டிய உருமாலையோடு

திட்டியே தீர்க்கும் அதிகாரிகளோடு
ஒட்டியே உடனிருக்கும் தொழிலாளிகள் நட்போடு
அட்டி அடுக்கும் வண்டிகளோடு
போராடியே பெறும் மாமூல்களோடு

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றோடு
ஓடி ஓடி ஓடாய் உடைந்து சேர்த்த காசு இருநூறை வைத்து
குடும்பம் நடத்துற மனைவியை நினைத்தும்
கொடுத்ததை தின்கிற புள்ளையை நினைத்தும்

சிரித்து மகிழ்கிற பெற்றோரை நினைத்தும்
ஆறுதல் அடையுது இந்த ஆசாமி மனசு
காலைல மீண்டும் கந்து வட்டிக்காரன் நினைவு வந்ததும்
உடனே ஊக்கை தூக்குற நானு லோடு மேனு...
.