Showing posts with label கீச்சுகள். Show all posts
Showing posts with label கீச்சுகள். Show all posts

கீச்சுகள் 15

*
பேருந்துப் பயணத்தில் ஜன்னலோர இருக்கையில் தாயின் கையில் கைகளை அசைத்தபடியே அழும் பச்சிளம் குழந்தை. பின் இருக்கையில் கொஞ்சம் படபடப்புடனேயே நான்.
*
மன நலம் பாதிக்கப்படுவது மரணத்திலும் கொடுமை. அவர்களை அனாதையாய் விடுவது அதனினும் கொடுமை..
*
சில நெகிழ்வான தருணங்களில் திடமாக உள்ள நெஞ்சமும் திரவமாக மாறுவதின் அடையாளம் தான் கண்ணீர்..


*
மிரண்டு போகும் பயம், மிரள வைக்கும் துணிச்சல் இவை இரண்டுமே இரவில் எளிதில் சாத்தியம்...
*
வென்றே ஆகவேண்டுமெனத்தானே இவ்வளவு ஒப்பனைகளும், ஒத்திகைகளும்...
*
தீர்மானம் நிறைவேற்றுவது மட்டுமல்ல, அந்தக் காரியத்திலே மிகத் தீர்மானமாக இருப்பதும் மிகவும் சிறப்பு..
*
எறும்பின் தாகத்தை எண்ணெய்தான் நன்கு அறியும்..
*
ஒன்றின் கெடுதலிலிருந்து காத்துக்கொள்ள மற்றொன்றைக் கொண்டு வருகிறோம். அதன் கெடுதலை உணர்ந்தும், உணராமலும்...
*
தான் நோய் நொடி இல்லாமல் வாழணும், தன் வியாபாரம் சிறக்கணும் என கடவுளை வேண்டி கடையைத் திறக்கிறான் மருந்து வியாபாரி.
*
சரக்கு என்ற சொல்லை மதுவிற்காகப் பயன்படுத்தும் போதுதான் அந்த வார்த்தை முழுமையடைந்ததாய் உணரும் பல குடிமகன்கள்!
*
பக்கத்து வீட்டுப்பையன் பத்தாம் வகுப்பென்பதால் பலத்த குரலில் படித்துக்கொண்டே இருக்கிறான், கணிதப் பாடத்தையும் சேர்த்து.. #இன்றைய_கல்வி.
*
எந்தக் கடையிலும் கிடைக்கப்பெறாத உத்வேக மருந்து..
-♥ அவள் கடைக்கண் பார்வை
*
பல நிகழ்வுகளைக் கடந்தாலும் நினைவுகளைச் சுமந்தபடியே வாழ்க்கை ரதத்தில் பயணிக்கிறோம்..
*
விருப்பமில்லா பொறுப்புகளைத் திணிப்பதன் மூலம் வெறுப்புகள்தான் வேரூன்றி வளரத் தொடங்குகிறது...
*
மனதிற்கு மருந்தாக சிறிதளவேனும் சமாதானம் நித்தம் தேவைப்படுகிறது.
*
பனித்துளிக்குள் பகலவன் பளபளப்பாய்ச் சிரிக்கிறான்., எமன் தானென்று அறியாமல்.
*
குறைந்தபட்ச தண்டனையாக மரண தண்டனையே விதிக்கப்படுகிறது கொசுவிற்கு..
*
நிழல் கூட எப்போதும் உன்னுடனேயே வர வேண்டுமென்றால் அது வெளிச்சத்தின் ஒத்துழைப்பால்தான் சாத்தியம்...
*
இங்கிலிஷ் மட்டுமல்ல இங்கிதமும் தெரிஞ்சுக்கணும்...
*
அநாயாசமாக செய்து முடிப்பவனுக்கு அனுபவம் மட்டுமல்ல அவன் வித்தியாசமான அணுகுமுறை கூட காரணமாக இருக்கலாம்.
*
ஔவியம் அழித்தலும் ஆகச்சிறந்த சாதனையே..
*
வாய்ப்பு வாசல் வர வேண்டுமென நினைப்பது ஆசை என வைத்தால், வாயிற்கதவு வரை வர வேண்டுமென நினைப்பது பேராசையே...
*
பண்டிகைகளை அழித்து வெறும் விடுமுறையாய் (மட்டும்) எண்ணி தொலைக்காட்சியில் தொலைக்கிறோம்.
*
அலைபேசியில் ஐந்தாறு மொழிகளில் அநாயாசமாக பேசிக்கொண்டு வருபவரின் அருகில் அவ்வளவு ஒரு அடக்க ஒடுக்கமாக அசைவில்லாமல் நான்.. #பேருந்துப்பயணத்தில்
*

கீச்சுகள் 14

*
வள்ளுவன் போல் நிலைத் தகவல்
வாய்த்தவர்கள் எவரும் இலர்..

*
தற்காலிகப் பதவி, நிரந்தரப் பதவி, பதவி உயர்வு என படிப்படியாக பதவி ஆசைகளும் வளர்ந்து கொண்டேதான் உள்ளது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்...
*
நிதானம்:
சாலை, வேலை இரண்டிலும் தேவை...
*
இந்த சுதந்திர இந்தியாவில் எந்திரங்கள் இல்லாமல் மந்திரங்கள் கற்காமல் பல தந்திரங்களைக் கரைத்துக் குடித்தவர்கள் இந்த (அரசு) அதிகாரிகள்...
*
பூட்டு
இது வாயை மூடிக் கொண்டிருப்பதாகவும் நினைக்கலாம்.
தன் வேலையச் செய்து கொண்டிருப்பதாகவும் நினைக்கலாம்.
*
இது ஒன்றும் புதிதல்ல,
வழக்கமான தவறுகளிலிருந்து சற்று மாறுபட்டது தான்..
*
திறமையான (அரசு) அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும் ஃபேண்ட்-ல் எங்கெங்கு பாக்கெட் வைத்து தைக்க வேண்டும் என்று..
*
சத்தமே இல்லாமல் வந்து விடுவதாகவும், மகா யுத்தம் நடத்தியே சிதைக்க வேண்டியதாகவும் உள்ளது நம் தொப்பை..
*
ஏற்றி விட ஏணிகள் தேவையில்லை, எண்ணங்கள் சரியாக இருந்தால் போதும்.
*
மற்றவர்களை வீழ்த்துவது மட்டுமே வெற்றி என்ற இலக்கை எட்டி விட்டதாக ஆகிவிடாது.
*
அளகின் அலகும் அழகோ அழகு
-ரசிப்பவர்களுக்கு
*
தேடல் தொடங்கினாலும் தொலைவது குறைவதில்லை.
*
எதிர்பார்த்த பாதையில் தடைகள் உள்ளது என்பதற்காக பயணத்தையே நிறுத்துவது எவ்வகையில் நியாயம் ஆகும்?
*
ஐயமின்றி விளையாடும் அணில்களின் அழகை ரசிக்கவாவது மரங்கள் சூழ்ந்த கோயிலுக்கு மாதம் ஒரு முறையேனும் செல்ல வேண்டும்
*
பயின்றேதான் அனைத்தையும் சாதிக்க வேண்டுமென்பதில்லை. கொஞ்சம் முயன்றாலும் நிறைய சாதிக்கலாம்.
*
கடந்து வந்துவிட்டால் அனைத்தையும் வென்று வந்ததாக அர்த்தம் இல்லை
*
கைகளிலேயே எட்டிப் பிடித்துவிடும் இலக்கென்று நினைத்தால் அது வானமே என்றாலும் ஏணி எதற்கு?
*
எட்டிப்பிடித்து ஒரு முத்தம்
கொடுத்து விடுவேன்.
அந்த நிலவு மட்டும் என்
கைகளில் சிக்கிவிட்டால்..
*
நடிப்பது, இரட்டை வேடமாய் நடிப்பது என இரண்டுமே சுலபமாய் நடந்து விடுகிறது சினிமாவை விட வாழ்க்கையில்.
*
உணவும் இல்லாமல் ஊட்டச்சத்தும் இல்லாமல் ஆரோக்கியமாய் வளர்வதில் சோம்பேறித்தனம் தான் முதலிடமாக இருக்க முடியும்.
*
தொலைத்ததையே தேடிக்கொண்டிருந்தால் கொலம்பஸ் போல் எப்படி ஆவது?
*
உயிர் பிரிந்தவனின் கண்ணில் (இறுதியாக) வடிந்திருக்கும் கண்ணீர் அவனுடைய நிறைவேறாத ஆசைகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடகக் கூட இருக்கலாம்
*
அநியாயங்களைத் தட்டிக் கேட்கா விட்டாலும் பரவாயில்லை. தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தாமலிருங்கள். அது போதும்.
*
சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் ஓரிரு மணித்துளிகளில் ஓராயிரம் உண்மை, பொய்களை உணர்த்தி விடுகிறது.
*

கீச்சுகள்- 13


புறப்பட்ட இடமும், சேர்ந்த இடமும் சரி என்பதற்காக வந்த பாதைகள் அனைத்தும் சரியாகத்தான் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது...

*

ஆகச்சிறந்த ஆயுதங்கள்
தேவையில்லை.,
சிறிய விளக்கை
அணைக்க..



 *

விதிகளே சரியாக இல்லாத போது விதி மீறலைப் பற்றி என்ன பேசி என்ன பயன்??...

*

இந்த மண்ணிற்கு அப்படி என்ன பெரிய எதிர்பார்ப்பு இருந்து விடப் போகிறது அந்த வானத்திடம்..
மழையைத் தவிர...

*


சாதனைக்காக படைப்புகளை உருவாக்க வேண்டியதில்லை..
நல்ல படைப்புகள் தானாகவே சாதனையை உருவாக்கும்...


*

கேள்வி என்பது மற்றவர்களைக் கேட்க மட்டமல்ல, நம்மையே நாம் கேட்பதற்கும் தான்...


*


அடையாளம் தெரியாமல் காணாமல் போனவைகள் பட்டியலில் நேற்றைய மழை தான் இன்று முதலிடம் பிடிக்கிறது....

*

எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் சுமந்துகொண்டு நம்பிக்கை என்னும் கயிற்றால் இழுக்கப்படுவதுதான் வாழ்க்கைக்தேர்....

*


மௌனத்தின் எண்ணிலடங்கா அர்த்தங்களில் ஒன்று தான் இந்த 'சம்மதம்'...

---------

கீச்சுகள்- 12


களைக்காமல் முன்னேறுவது எப்படியென்று யோசிப்பது புத்திசாலித்தனமாகவும், உழைக்காமல் முன்னேறுவது எப்படியென்று யோசிப்பது சோம்பேறித்தனமாகவும் தான் எனக்குப் படுகின்றது...

*

நினைக்காததும் கிடைக்க தேடிக்கொண்டே இரு....

*

லஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம் என்பதாலோ என்னவோ அதை இன்னும் ஒழித்து விட முடியவில்லை...


* 


தினமும் இருமிக் கொண்டே தான் இருக்கிறாய்.. கொஞ்சம் உமிழ்ந்து நீரைத் துப்பி விட்டுத்தான் போய் விடேன் மேகமே...


*

விழுந்த இடத்திலேயே அந்த கணத்திலேயே எழுந்து விட்டால் அதுவும் ஒரு வெற்றி தான்..

-தடங்கல் இல்லாமல் தடங்கள் அமைவதில்லை...


*

கொஞ்சம் நாமாகவும் கற்றுத் தெரிந்து கொள்ளலாம்..
அனுபவம் தான் அத்தனையையும் கற்றுத் தர வேண்டுமென்பதில்லை.

* 

 நிலவைப் போல் சூரியனிடமிருந்து கடன் வாங்கித்தான் பார்க்கிறது.. ஆனாலும் அமாவாசையில் மட்டுமே சொல்லக்கூடிய அளவிற்கு வெற்றி கிடைக்கிறது இந்த சோலார் விளக்கிற்கு...

*

காரணங்கள் கச்சிதமாக இருக்கவேண்டும் என்றில்லை..
- குழந்தையின் அழுகைக்கும், புன்னகைக்கும்..



....

கீச்சுகள்- 11


பிரிதலின் போதுதான் அதைப் பற்றிய புரிதலும் அதிகமாகிறது...
-மின்வெட்டு உள்பட..

*

முட்டைக்கும் வருவலுக்கும் இடைப்பட்டது தான் வாழ்க்கை....

-
கோழிக்கு..


*
இப்போதைக்கு சொல்ல இதுதான்..

அதே குற்றம், அதே பிழை
-
அநேக இடங்களில்



*

குழந்தை அழுதால் மட்டுமல்ல அந்த வானம் அழுதாலும் ரசிக்க ஒரு கூட்டமே உள்ளது...


*

ஏன், எதற்கு என்பதை மற்றவர்களிடம் கேட்பதற்கு முன்னால், நம்மை நாமே கேட்டுக் கொண்டால் இன்னும் கூட கொஞ்சம் சிறப்பாக இருக்கும்..

* 

வழிமுறைகளையே சரியாக அமைக்காமல் நடந்த தவறுக்கு வருத்தப்படுவதும், வார்த்தைகளைக் கொட்டுவதும் நல்ல நிர்வாகத்திற்கு பொருத்தமான செயல் அல்ல....

*

இயற்கையாக வெளிப்படுவது, செயற்கையாக வெளிப்படுத்துவது ஆகிய இரண்டு பண்புகளைக் கொண்டுள்ளது மனிதனின் சிரிப்பு...


*


'இப்படி கெட்டது நடக்குமென்று எனக்கு முன்னரே தெரியும்' என்று கூறும் பலரும் அதைத் தடுக்க முயற்சி எடுத்திருந்தால் அப்பொழுதே நல்லவன் பட்டம் வாங்கி இருக்கலாமே.........

கீச்சுகள்- 10


நல்ல உள்ளங்களுக்கு, நல்ல உள்ளங்கள் வாழ்த்துவதற்காவே இந்த உள்ளங்கையால் ஆசிர்வாதம் செய்வது நம் முன்னோர்களால் கொண்டு வரப்பட்டிருக்கலாம்...

*


உயிருக்குப் (நீதிக்குப்) போராடும் உயிரை (நீதியை), அவரவர் கொன்றால் குணப்படுத்த முடியாததாகவும், அடுத்தவர் கொன்றால் மிகப்பெரிய குற்றமாகவும் தீர்ப்பளிக்கிறது நம் மனம் எனும் நீதிமன்றம்...


*


எதிரி என்று நினைத்து அவரை
உதறி நீயும் எறிந்து விட்டு,
சிதறி நீயும் கிடந்த போது
பதறி வந்து உதவிய அதே 'அவரை' நினைத்து
கதறி அழ மட்டும் எப்படி கற்றுக் கொண்டாய் மனமே?.


*

வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிவதற்கு அனுபவம் எனும் அகராதி நன்றாகவே உதவுகின்றது.....

*

கூர்ம அவதாரம் எடுத்ததும் விஷ்ணு தான், நரசிம்ம அவதாரம் எடுத்ததும் விஷ்ணு தான்.
-
உருவம் முக்கியமல்ல... உபயோகம் தான் முக்கியம்..

*


ஏட்டில் எழுதாமலேயே நாட்டில் நிறைவேற்றப்பட்ட மறைமுக சட்டம் தான்
இந்த லஞ்சம்....

*

திட்டங்களைப் பற்றி தெளிவாய்த் தெரியாத அதிகாரிகளும்,

அரைகுறையாய் அறிந்து வைத்துள்ள அறிவிப்பு பலகைகளும்.. .

-(
அரசு) அலுவலகங்களில்.

கீச்சுகள்- 9


திட்டித் திருந்துவதற்கு முன்னாலேயே, பட்டுத் திருந்தி விட்டால் நல்ல பாட்டாளி என்ற பெயரையே வாங்கி விடிகிறோம் சில நேரங்களில்...........

*

தற்பொழுதெல்லாம் பல திரைப்படங்களின் தலைப்பு படத்துடன்தான் ஒட்டுவதில்லை பாவம் ...


*

பாலுக்கும், பாம்புக்கும் ஆடை கொடுத்து கௌரவம் செய்திருக்கிறது இந்த இயற்கை....

*

நமக்குத் தேவை உள்ளபோது பராமரிப்பதும், தேவை இல்லாதபோது நிராகரிப்பதும், சில பொருள்களை மட்டுமல்ல., பல மனிதர்களையும் தான்




ஒரு மரத்தின் கிளையை வெட்டுவதற்கு, இன்னொரு மரத்தின் கிளையினால் செய்யப்பட்ட ஏணியே துணைபுரிவதற்கு உதவி என்பதா?, துரோகம் என்பதா?....


*

குழந்தைக்கு உணவு ஊட்ட இந்த அறிவியல் யுகத்திலும் சில அம்மாக்களின் நம்பிக்கை.......
-அந்த நிலா... 

*

குறைந்தபட்சம், அதிகபட்சம் என்று குறிப்பிட்டு சலுகைகளை அறிவிப்பதும் ஒருவகை பாரபட்சம் தான்...


*

கண்ணீர் அஞ்சலி பதிவிலும் புன்னகைத்துக் கொண்டுள்ள புகைப் படங்களைப் பார்த்தால் நம் வாழ்க்கையின் மீதுள்ள நம்பிக்கையின் விழுக்காடு நம்மை அறியாமலேயே நிறையவே கூடி விடுகிறது...

மழை விருந்தாளி


வீடு வந்த விருந்தாளிக்கு
வாசல் தாண்ட விருப்பமில்லை

            -இன்றைய மழை



கீச்சுகள் 8


*
கதைகளை ஆழ்ந்து படிக்கும் பொழுது, கதா பாத்திரங்களும், காட்சிகளும் அவரவர் என்னம் போல் கண் முன்னே ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.....

*

ஒருவர் மேல் உள்ள விருப்பு, வெறுப்பு.. இந்த இரண்டுமே அவர்களைப் பற்றி நம்மை அதிகம் பேச வைக்கிறது..


*

நாகரீகம் என்ற பெயரில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பணியில் இப்பொழுது பெரும் பங்கு வகிக்கிறது..

-300
மி.லி மினரல் வாட்டர்..

*

முடியவில்லை என்று சொல்வதை விட முடிக்கவில்லை என்று சொன்னால், இன்னும் அந்த செயலுக்கு உயிர் உள்ளது என்று அர்த்தம்.. ஆகையால் முடியவில்லை என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்..

*


எவ்வளவு அறுசுவை உணவு சாப்பிட்டாலும், ஒரு நகைச்சுவையை சுவைத்தால் மட்டுமே எனக்கு வயிறு நிறைகிறது....

#
சிரிப்புடன் சிந்திக்கவும் வைப்போம்..

*******************************************************