கீச்சுகள் 15

*
பேருந்துப் பயணத்தில் ஜன்னலோர இருக்கையில் தாயின் கையில் கைகளை அசைத்தபடியே அழும் பச்சிளம் குழந்தை. பின் இருக்கையில் கொஞ்சம் படபடப்புடனேயே நான்.
*
மன நலம் பாதிக்கப்படுவது மரணத்திலும் கொடுமை. அவர்களை அனாதையாய் விடுவது அதனினும் கொடுமை..
*
சில நெகிழ்வான தருணங்களில் திடமாக உள்ள நெஞ்சமும் திரவமாக மாறுவதின் அடையாளம் தான் கண்ணீர்..


*
மிரண்டு போகும் பயம், மிரள வைக்கும் துணிச்சல் இவை இரண்டுமே இரவில் எளிதில் சாத்தியம்...
*
வென்றே ஆகவேண்டுமெனத்தானே இவ்வளவு ஒப்பனைகளும், ஒத்திகைகளும்...
*
தீர்மானம் நிறைவேற்றுவது மட்டுமல்ல, அந்தக் காரியத்திலே மிகத் தீர்மானமாக இருப்பதும் மிகவும் சிறப்பு..
*
எறும்பின் தாகத்தை எண்ணெய்தான் நன்கு அறியும்..
*
ஒன்றின் கெடுதலிலிருந்து காத்துக்கொள்ள மற்றொன்றைக் கொண்டு வருகிறோம். அதன் கெடுதலை உணர்ந்தும், உணராமலும்...
*
தான் நோய் நொடி இல்லாமல் வாழணும், தன் வியாபாரம் சிறக்கணும் என கடவுளை வேண்டி கடையைத் திறக்கிறான் மருந்து வியாபாரி.
*
சரக்கு என்ற சொல்லை மதுவிற்காகப் பயன்படுத்தும் போதுதான் அந்த வார்த்தை முழுமையடைந்ததாய் உணரும் பல குடிமகன்கள்!
*
பக்கத்து வீட்டுப்பையன் பத்தாம் வகுப்பென்பதால் பலத்த குரலில் படித்துக்கொண்டே இருக்கிறான், கணிதப் பாடத்தையும் சேர்த்து.. #இன்றைய_கல்வி.
*
எந்தக் கடையிலும் கிடைக்கப்பெறாத உத்வேக மருந்து..
-♥ அவள் கடைக்கண் பார்வை
*
பல நிகழ்வுகளைக் கடந்தாலும் நினைவுகளைச் சுமந்தபடியே வாழ்க்கை ரதத்தில் பயணிக்கிறோம்..
*
விருப்பமில்லா பொறுப்புகளைத் திணிப்பதன் மூலம் வெறுப்புகள்தான் வேரூன்றி வளரத் தொடங்குகிறது...
*
மனதிற்கு மருந்தாக சிறிதளவேனும் சமாதானம் நித்தம் தேவைப்படுகிறது.
*
பனித்துளிக்குள் பகலவன் பளபளப்பாய்ச் சிரிக்கிறான்., எமன் தானென்று அறியாமல்.
*
குறைந்தபட்ச தண்டனையாக மரண தண்டனையே விதிக்கப்படுகிறது கொசுவிற்கு..
*
நிழல் கூட எப்போதும் உன்னுடனேயே வர வேண்டுமென்றால் அது வெளிச்சத்தின் ஒத்துழைப்பால்தான் சாத்தியம்...
*
இங்கிலிஷ் மட்டுமல்ல இங்கிதமும் தெரிஞ்சுக்கணும்...
*
அநாயாசமாக செய்து முடிப்பவனுக்கு அனுபவம் மட்டுமல்ல அவன் வித்தியாசமான அணுகுமுறை கூட காரணமாக இருக்கலாம்.
*
ஔவியம் அழித்தலும் ஆகச்சிறந்த சாதனையே..
*
வாய்ப்பு வாசல் வர வேண்டுமென நினைப்பது ஆசை என வைத்தால், வாயிற்கதவு வரை வர வேண்டுமென நினைப்பது பேராசையே...
*
பண்டிகைகளை அழித்து வெறும் விடுமுறையாய் (மட்டும்) எண்ணி தொலைக்காட்சியில் தொலைக்கிறோம்.
*
அலைபேசியில் ஐந்தாறு மொழிகளில் அநாயாசமாக பேசிக்கொண்டு வருபவரின் அருகில் அவ்வளவு ஒரு அடக்க ஒடுக்கமாக அசைவில்லாமல் நான்.. #பேருந்துப்பயணத்தில்
*

3 comments:

Unknown said...

கீச்சுக்கள் தொகுப்பு அருமை !
தொடர்கிறேன் ...தொடருங்கள் சகோ !

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய நிலைமைக்கு சிறிதளவேனும் சமாதானம்.... அதிகமாகவே வேண்டும்... இல்லையெனில் இரண்டாவது கீச்சு...

ezhil said...

ஆஹா எப்படியெல்லாம் சிந்திக்கறீங்க..."வென்றே ஆகவேண்டுமெனத்தானே இவ்வளவு ஒப்பனைகளும், ஒத்திகைகளும்.
" அருமை...