கீச்சுகள்- 12


களைக்காமல் முன்னேறுவது எப்படியென்று யோசிப்பது புத்திசாலித்தனமாகவும், உழைக்காமல் முன்னேறுவது எப்படியென்று யோசிப்பது சோம்பேறித்தனமாகவும் தான் எனக்குப் படுகின்றது...

*

நினைக்காததும் கிடைக்க தேடிக்கொண்டே இரு....

*

லஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம் என்பதாலோ என்னவோ அதை இன்னும் ஒழித்து விட முடியவில்லை...


* 


தினமும் இருமிக் கொண்டே தான் இருக்கிறாய்.. கொஞ்சம் உமிழ்ந்து நீரைத் துப்பி விட்டுத்தான் போய் விடேன் மேகமே...


*

விழுந்த இடத்திலேயே அந்த கணத்திலேயே எழுந்து விட்டால் அதுவும் ஒரு வெற்றி தான்..

-தடங்கல் இல்லாமல் தடங்கள் அமைவதில்லை...


*

கொஞ்சம் நாமாகவும் கற்றுத் தெரிந்து கொள்ளலாம்..
அனுபவம் தான் அத்தனையையும் கற்றுத் தர வேண்டுமென்பதில்லை.

* 

 நிலவைப் போல் சூரியனிடமிருந்து கடன் வாங்கித்தான் பார்க்கிறது.. ஆனாலும் அமாவாசையில் மட்டுமே சொல்லக்கூடிய அளவிற்கு வெற்றி கிடைக்கிறது இந்த சோலார் விளக்கிற்கு...

*

காரணங்கள் கச்சிதமாக இருக்கவேண்டும் என்றில்லை..
- குழந்தையின் அழுகைக்கும், புன்னகைக்கும்..



....

No comments: