கீச்சுகள் 8


*
கதைகளை ஆழ்ந்து படிக்கும் பொழுது, கதா பாத்திரங்களும், காட்சிகளும் அவரவர் என்னம் போல் கண் முன்னே ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.....

*

ஒருவர் மேல் உள்ள விருப்பு, வெறுப்பு.. இந்த இரண்டுமே அவர்களைப் பற்றி நம்மை அதிகம் பேச வைக்கிறது..


*

நாகரீகம் என்ற பெயரில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பணியில் இப்பொழுது பெரும் பங்கு வகிக்கிறது..

-300
மி.லி மினரல் வாட்டர்..

*

முடியவில்லை என்று சொல்வதை விட முடிக்கவில்லை என்று சொன்னால், இன்னும் அந்த செயலுக்கு உயிர் உள்ளது என்று அர்த்தம்.. ஆகையால் முடியவில்லை என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்..

*


எவ்வளவு அறுசுவை உணவு சாப்பிட்டாலும், ஒரு நகைச்சுவையை சுவைத்தால் மட்டுமே எனக்கு வயிறு நிறைகிறது....

#
சிரிப்புடன் சிந்திக்கவும் வைப்போம்..

*******************************************************