கீச்சுகள் 14

*
வள்ளுவன் போல் நிலைத் தகவல்
வாய்த்தவர்கள் எவரும் இலர்..

*
தற்காலிகப் பதவி, நிரந்தரப் பதவி, பதவி உயர்வு என படிப்படியாக பதவி ஆசைகளும் வளர்ந்து கொண்டேதான் உள்ளது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்...
*
நிதானம்:
சாலை, வேலை இரண்டிலும் தேவை...
*
இந்த சுதந்திர இந்தியாவில் எந்திரங்கள் இல்லாமல் மந்திரங்கள் கற்காமல் பல தந்திரங்களைக் கரைத்துக் குடித்தவர்கள் இந்த (அரசு) அதிகாரிகள்...
*
பூட்டு
இது வாயை மூடிக் கொண்டிருப்பதாகவும் நினைக்கலாம்.
தன் வேலையச் செய்து கொண்டிருப்பதாகவும் நினைக்கலாம்.
*
இது ஒன்றும் புதிதல்ல,
வழக்கமான தவறுகளிலிருந்து சற்று மாறுபட்டது தான்..
*
திறமையான (அரசு) அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும் ஃபேண்ட்-ல் எங்கெங்கு பாக்கெட் வைத்து தைக்க வேண்டும் என்று..
*
சத்தமே இல்லாமல் வந்து விடுவதாகவும், மகா யுத்தம் நடத்தியே சிதைக்க வேண்டியதாகவும் உள்ளது நம் தொப்பை..
*
ஏற்றி விட ஏணிகள் தேவையில்லை, எண்ணங்கள் சரியாக இருந்தால் போதும்.
*
மற்றவர்களை வீழ்த்துவது மட்டுமே வெற்றி என்ற இலக்கை எட்டி விட்டதாக ஆகிவிடாது.
*
அளகின் அலகும் அழகோ அழகு
-ரசிப்பவர்களுக்கு
*
தேடல் தொடங்கினாலும் தொலைவது குறைவதில்லை.
*
எதிர்பார்த்த பாதையில் தடைகள் உள்ளது என்பதற்காக பயணத்தையே நிறுத்துவது எவ்வகையில் நியாயம் ஆகும்?
*
ஐயமின்றி விளையாடும் அணில்களின் அழகை ரசிக்கவாவது மரங்கள் சூழ்ந்த கோயிலுக்கு மாதம் ஒரு முறையேனும் செல்ல வேண்டும்
*
பயின்றேதான் அனைத்தையும் சாதிக்க வேண்டுமென்பதில்லை. கொஞ்சம் முயன்றாலும் நிறைய சாதிக்கலாம்.
*
கடந்து வந்துவிட்டால் அனைத்தையும் வென்று வந்ததாக அர்த்தம் இல்லை
*
கைகளிலேயே எட்டிப் பிடித்துவிடும் இலக்கென்று நினைத்தால் அது வானமே என்றாலும் ஏணி எதற்கு?
*
எட்டிப்பிடித்து ஒரு முத்தம்
கொடுத்து விடுவேன்.
அந்த நிலவு மட்டும் என்
கைகளில் சிக்கிவிட்டால்..
*
நடிப்பது, இரட்டை வேடமாய் நடிப்பது என இரண்டுமே சுலபமாய் நடந்து விடுகிறது சினிமாவை விட வாழ்க்கையில்.
*
உணவும் இல்லாமல் ஊட்டச்சத்தும் இல்லாமல் ஆரோக்கியமாய் வளர்வதில் சோம்பேறித்தனம் தான் முதலிடமாக இருக்க முடியும்.
*
தொலைத்ததையே தேடிக்கொண்டிருந்தால் கொலம்பஸ் போல் எப்படி ஆவது?
*
உயிர் பிரிந்தவனின் கண்ணில் (இறுதியாக) வடிந்திருக்கும் கண்ணீர் அவனுடைய நிறைவேறாத ஆசைகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடகக் கூட இருக்கலாம்
*
அநியாயங்களைத் தட்டிக் கேட்கா விட்டாலும் பரவாயில்லை. தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தாமலிருங்கள். அது போதும்.
*
சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் ஓரிரு மணித்துளிகளில் ஓராயிரம் உண்மை, பொய்களை உணர்த்தி விடுகிறது.
*

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆரம்பமும் அசத்தல்... பாராட்டுக்கள்... அடுத்த பதிவு செல்கிறேன்...

ezhil said...

அருமையான கீச்சுகள்.. சில அதற்கும் மேலே... சில கீச்சுக்களை உங்கள் பெயருடன் என் முக நூல் பக்கத்தில் பகிர்கிறேன்... நன்றி