கீச்சுகள்- 10


நல்ல உள்ளங்களுக்கு, நல்ல உள்ளங்கள் வாழ்த்துவதற்காவே இந்த உள்ளங்கையால் ஆசிர்வாதம் செய்வது நம் முன்னோர்களால் கொண்டு வரப்பட்டிருக்கலாம்...

*


உயிருக்குப் (நீதிக்குப்) போராடும் உயிரை (நீதியை), அவரவர் கொன்றால் குணப்படுத்த முடியாததாகவும், அடுத்தவர் கொன்றால் மிகப்பெரிய குற்றமாகவும் தீர்ப்பளிக்கிறது நம் மனம் எனும் நீதிமன்றம்...


*


எதிரி என்று நினைத்து அவரை
உதறி நீயும் எறிந்து விட்டு,
சிதறி நீயும் கிடந்த போது
பதறி வந்து உதவிய அதே 'அவரை' நினைத்து
கதறி அழ மட்டும் எப்படி கற்றுக் கொண்டாய் மனமே?.


*

வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிவதற்கு அனுபவம் எனும் அகராதி நன்றாகவே உதவுகின்றது.....

*

கூர்ம அவதாரம் எடுத்ததும் விஷ்ணு தான், நரசிம்ம அவதாரம் எடுத்ததும் விஷ்ணு தான்.
-
உருவம் முக்கியமல்ல... உபயோகம் தான் முக்கியம்..

*


ஏட்டில் எழுதாமலேயே நாட்டில் நிறைவேற்றப்பட்ட மறைமுக சட்டம் தான்
இந்த லஞ்சம்....

*

திட்டங்களைப் பற்றி தெளிவாய்த் தெரியாத அதிகாரிகளும்,

அரைகுறையாய் அறிந்து வைத்துள்ள அறிவிப்பு பலகைகளும்.. .

-(
அரசு) அலுவலகங்களில்.

No comments: