கீச்சுகள்- 9


திட்டித் திருந்துவதற்கு முன்னாலேயே, பட்டுத் திருந்தி விட்டால் நல்ல பாட்டாளி என்ற பெயரையே வாங்கி விடிகிறோம் சில நேரங்களில்...........

*

தற்பொழுதெல்லாம் பல திரைப்படங்களின் தலைப்பு படத்துடன்தான் ஒட்டுவதில்லை பாவம் ...


*

பாலுக்கும், பாம்புக்கும் ஆடை கொடுத்து கௌரவம் செய்திருக்கிறது இந்த இயற்கை....

*

நமக்குத் தேவை உள்ளபோது பராமரிப்பதும், தேவை இல்லாதபோது நிராகரிப்பதும், சில பொருள்களை மட்டுமல்ல., பல மனிதர்களையும் தான்




ஒரு மரத்தின் கிளையை வெட்டுவதற்கு, இன்னொரு மரத்தின் கிளையினால் செய்யப்பட்ட ஏணியே துணைபுரிவதற்கு உதவி என்பதா?, துரோகம் என்பதா?....


*

குழந்தைக்கு உணவு ஊட்ட இந்த அறிவியல் யுகத்திலும் சில அம்மாக்களின் நம்பிக்கை.......
-அந்த நிலா... 

*

குறைந்தபட்சம், அதிகபட்சம் என்று குறிப்பிட்டு சலுகைகளை அறிவிப்பதும் ஒருவகை பாரபட்சம் தான்...


*

கண்ணீர் அஞ்சலி பதிவிலும் புன்னகைத்துக் கொண்டுள்ள புகைப் படங்களைப் பார்த்தால் நம் வாழ்க்கையின் மீதுள்ள நம்பிக்கையின் விழுக்காடு நம்மை அறியாமலேயே நிறையவே கூடி விடுகிறது...

No comments: