ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடத்தப்படும் ஈரோடு புத்தகத்
திருவிழா தொடர்ந்து 9-ஆம் ஆண்டாக நேற்று ஆகஸ்டு 3- ஆம் தேதி துவங்கியது..
இவ்விழா வரும் 14-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு ஈரோடு வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது..
புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா ஆகஸ்டு 3-ம் தேதி மாலை 5.30 மணிக்கு ஈரோடு
வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது என ஏற்கனவே அனைவருக்கும் அழைப்பிதழ் விடப்பட்டிருந்தது.. ஏற்கனவே மக்கள் சிந்தனைப் பேரவை அலுவலத்தில் திரு
த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களுடனான ஒரு சிறிய சந்திப்பில் எனக்கு விழா
அழைப்பிதழ் நேரிலேயே கிடைக்கப்பெற்றது..
![]() |
திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்களுடனான சந்திப்பில் நானும், தோழர்களும் |
மிகச்சரியாக நேற்று (03.08.13) மாலை 5.30 மணிக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாண்பமை நீதியரசர் பி.சதாசிவம் அவர்கள் அரங்கினைத் திறந்து வைத்தார்கள்.
![]() |
அரங்கின் முன்புறத் தோற்றம் |
![]() |
திரு.பி.சதாசிவம் அவர்கள் அரங்கினைத் திறந்து வைத்து புத்தகங்களைப் பார்வையிட்ட பொழுது நன்றி :தினமணி (புகைப்படம்) |
இதை அருகினில் இருந்து பார்த்த பாக்கியம் எனக்குக் கிடைத்தது என்பது எனக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பம்சமிக்க முக்கிய நிகழ்வாகவே என் மனதில் பதிவானது...
விழாவிற்கு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வே.க.சண்முகம் ஐ.ஏ.எஸ்
அவர்கள் தலைமை தாங்கினார்.. வரவேற்பு மற்றும் விழா அறிமுக உரையை ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் தூய
தமிழில் தன் கணீர் குரலில் மேற்கொண்டார்..
![]() |
திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் உரை நிகழ்த்திய பொழுது |
திரு.த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் பேசியதில் சில முக்கியத் துளிகள்:
-- இந்த ஆண்டு சென்ற ஆண்டைக் காட்டிலும் 25 அரங்குகள் கூடுதலாக மொத்தம் 225 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
-- மிகவும் தரமான புகழ்மிக்க அகில இந்திய மற்றும் மாநிலஅளவிலான தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பங்கேற்கின்றனர்.
-- 150 தமிழ்ப் புத்தக அரங்கங்களும் 68 ஆங்கிலப் புத்தக அரங்கங்களும் 17 கல்விக் குறுந்தகடுகளுக்கான அரங்கங்களும் இந்த ஆண்டு இடம் பெறுகின்றன.
--புத்தகம் வாங்குவதற்கு பள்ளி மாணவர்களுக்கான உண்டியல் திட்டம், ரூ.250க்கும் மேல் புத்தகம் வாங்கும் மாணவர்கள் அனைவருக்கும் நூல் ஆர்வலர் என்ற சான்றிதழ் வழங்கும் திட்டம்..
-- இந்த ஆண்டு பல புதிய அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன. வாசகர் வட்டம், படைப்பாளிகள் மேடை, அரிய புத்தகக் காட்சி ஆகியவை இவற்றுள் முக்கியமானவை..
-- இந்த ஆண்டு சென்ற ஆண்டைக் காட்டிலும் 25 அரங்குகள் கூடுதலாக மொத்தம் 225 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
-- மிகவும் தரமான புகழ்மிக்க அகில இந்திய மற்றும் மாநிலஅளவிலான தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பங்கேற்கின்றனர்.
-- 150 தமிழ்ப் புத்தக அரங்கங்களும் 68 ஆங்கிலப் புத்தக அரங்கங்களும் 17 கல்விக் குறுந்தகடுகளுக்கான அரங்கங்களும் இந்த ஆண்டு இடம் பெறுகின்றன.
--புத்தகம் வாங்குவதற்கு பள்ளி மாணவர்களுக்கான உண்டியல் திட்டம், ரூ.250க்கும் மேல் புத்தகம் வாங்கும் மாணவர்கள் அனைவருக்கும் நூல் ஆர்வலர் என்ற சான்றிதழ் வழங்கும் திட்டம்..
-- இந்த ஆண்டு பல புதிய அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன. வாசகர் வட்டம், படைப்பாளிகள் மேடை, அரிய புத்தகக் காட்சி ஆகியவை இவற்றுள் முக்கியமானவை..
அடுத்தபடியாக ஈரோடு தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவரான பத்மஸ்ரீ
எஸ்கேஎம். மயிலானந்தன் அவர்கள் விழாவின் சுருக்கமான வாழ்த்துரையையும், ஈரோடு
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வே.க.சண்முகம் அவர்கள் விழாவின் தலைமை
உரையையும் தெள்ளத் தெளிவான தமிழ் மொழியிலேயே தங்களுக்கே உரித்தான பாணியில் உரையாற்றினார்கள்..
அடுத்ததாக மாண்புமிகு நீதியரசர் பி.சதாசிவம் அவர்கள் உரை நிகழ்த்த வந்தார்..
நீதியரசர் பி.சதாசிவம் அவர்கள் பேசியதில் சில முக்கியக் குறிப்புகள்:
நான் மேல்நிலை வகுப்பு வரை தமிழ் மொழியில்தான் பாடம் பயின்றேன்.
நான் மேல்நிலை வகுப்பு வரை தமிழ் மொழியில்தான் பாடம் பயின்றேன்.
அதன் பிறகு சட்டம் பயிலும் போது ஆங்கிலத்தின் தேவையை உணர்ந்து கொண்டு ஆங்கில நாளிதழ் வாசிப்பதிலும், ஆங்கில அறிவைப் பெருக்கிக் கொள்வதிலும் முழு கவனம் செலுத்தினேன்..
அதன் பிறகு அவருடைய நீதிமன்ற பயணங்கள் வழக்கறிஞர் முதல், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உயர்ந்தது வரை அனைத்தையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கினார்...
அறிஞர்கள் வருகைக்கும், தங்களின் குழந்தைகளின் பிறந்த நாள் பரிசாகவும் இனி புத்தகங்களைப் பரிசாக வழங்க வேண்டும் என்பதைக் கேட்டுக் கொண்டார்..
இன்னும் பல்வேறு பயனுள்ள தகவல்களை அனைவரும் பயனுறும்படி தெளிவாகப் பேசி, தன் உரையை முடித்தார்..
விழாவில் பல அறிஞர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பல ஊர்களைச் சார்ந்த பொது மக்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்..
வழக்கம்போல் இத்திருவிழாவில் வாங்கப்படும் நூல்கள் அனைத்திற்கும் 10% சிறப்புக்கழிவு உண்டு.. நூலகங்களுக்கும் கல்வி நிறுவனங்ககளுக்கும் வாங்கப்படும் நூல்களுக்கு கூடுதல் கழிவு உண்டு..
நானும் கடந்த வருடம் போலவே எண்ணிக்கையில் கொஞ்சம் அதிகமாகவே புத்தகங்களை
வாங்கி வந்தேன்.. அடுத்த வருடத்திற்குள்ளாகவே அனைத்து நூல்களின் புது மை வாசம்
நீங்கி, என் கை பட்டுவிடுமென்றால் அதைவிட சிறந்த சாதனை வேறொன்றுமிருக்க
வாய்ப்பில்லை...
![]() |
புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்த மக்கள் கூட்டம் |
![]() |
புத்தகத் திருவிழாவில் நான் |
நன்றி: மக்கள் சிந்தனைப் பேரவை..
3 comments:
சிறப்பாக உள்ளது
Very Nice
பகிர்வு நன்றாக இருக்கிறது தம்பி...
-வீரா
Post a Comment