கீச்சுகள் 5


*
முற்றுப்புள்ளி வைத்து விட்டதால் மட்டும் அந்த வாக்கு (வாக்கியம்) முற்றுப்பெற்றதாய் ஆகிவிட முடியாது...


*

சில கேள்விகளுக்கு , சில கேள்விகளே பதிலாக அமைகின்றன.





*

நல்ல புத்தகங்களை 'விற்பதில்' உள்ள பெருமையை விட, அதில் உள்ளதைக் 'கற்பதில்' தான் மிகவும் பெருமை..


*
என்ன ஒரு உடன்பாடுடன் முரண்பாடு?
சில்லறை- நாணயம்.., இரண்டுமே கிட்டத்தட்ட ஒரு பொருள் தந்தாலும், அதனுடன் மனிதனைச் சேர்த்தால்?

சில்லறை மனிதன்??

நாணயமான மனிதன்??


*

கற்பனை என்பதும் இப்பொழுது விற்பனைப் பொருள் ஆகிவிட்டது... சினிமாக்களில், மேடைகளில், காவியங்களாய், ஓவியங்களாய், இன்னும்.....


*


வலைகளில் மாட்டிக் கொண்டால் மீள்வது சிரமம்தான்... எலியானாலும் , மனிதனானாலும் (இணையம்)
**********************************************

No comments: