என்னவளே நீ எங்கிருக்கிறாய்?....



புவியில் உள்ள காற்றாக
மண்ணில் ஊறும் ஊற்றாக

பகலில் ஒளிரும் சூரியனாக
இரவில் மிளிரும் சந்திரனாக

செடியில் பூக்கும் பூவாக
பூவில் கலந்த மணமாக

குயிலிடும் கேட்கும் குரலாக
மயிலிடம் தெரியும் அழகாக

வானில் மின்னும் தாரகையாக
ஓவியம் வரையும் தூரிகையாக

விழியில் உள்ள ஒளியாக
உடலில் கலந்த உயிராக

என்னவளே இதில் நீ எங்கிருக்கிறாய்
வந்துவிடு நான் காத்திருக்கிறேன்...

No comments: