பாலைவன பூமி இங்கே..


ஆடி மாசம் முடிஞ்சுருச்சு
ஆவணியும் பொறந்திருச்சு

காவிரியும் பெருகிருச்சு
கபினியும் தான் நெறஞ்சுருச்சு

வாய்க்கால்லயும் தண்ணி வந்துருச்சு
நாற்றங்கால்லயும் நெல்லு தூவியாச்சு


ஆனா.... இங்க...


தென்னையெல்லாம் வறண்டுருச்சு
பனையும் பாதி கருகிருச்சு

கிணறும் கீழே போயிருச்சு
மனசும் ஓடா ஒடஞ்சுருச்சு

கடவுளுக்கு கண்ணும் போச்சு
எங்களுக்கு மண்ணும் போச்சு

பலருக்கு பேச்சு போச்சு
சிலருக்கு மூச்சே போச்சு

சோலைவன கனவு போச்சு
பாலைவன பூமி ஆச்சு...

No comments: